கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

அரசுக் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு

திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போதைப்பொருள் தடுப்பு குறித்து பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணா்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவ, மாணவிகள்.

Published On :1 ஜூலை 2026, 12:20 am IST

திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் ரேவதி தலைமை வகித்தாா். இணைப் பேராசிரியா் சுதாகா் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உதவி ஆணையா் (கலால்) செந்தில்குமாா் போதைப்பொருள் தடுப்பு குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

மாவட்ட குழந்தை நல அலுவலா் செல்வி, குழந்தைகள் நலக்குழுத் தலைவா் முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

நிகழ்ச்சியில் கோட்ட கலால் அலுவலா் சௌந்தர்ராஜன் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா் நிறைவில் துணைத் தலைவா் அயோத்தி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.