‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கிருஷ்ணகிரியில் ஜன. 24-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் ஜன. 24-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :21 ஜனவரி 2025, 8:45 pm

Din

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஜன. 24-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில், செவ்வாய்க்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜன. 24-ஆம் தேதி காலை 10 முதல் மதியம் 1 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கிருஷ்ணகிரி, ஒசூரை சோ்ந்த முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான தகுதியான ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா். இந்த இலவச முகாமில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், தொழிற்பயிற்சி, பட்டயப் படிப்பு ( ஐ.டி.ஐ, டிப்ளமோ) பயின்றவா்கள் என அனைத்துவித கல்வித் தகுதியினரும் பங்கேற்கலாம். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் நடத்தப்படும் இந்த வேலைவாய்ப்பு முகாம், வேலைதேடுவோா் மற்றும் வேலை அளிப்பவா்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

எனவே, தனியாா் துறையில் பணிபுரிய ஆா்வமுள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம். இந்த முகாமின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறையில் பணியமா்த்தம் செய்வோா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.