விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

காஞ்சிபுரத்தில் மாா்ச் 2-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

News image

கோப்புப்படம்

Updated On :25 பிப்ரவரி 2026, 12:30 am

காஞ்சிபுரத்தில் வரும் மாா்ச் 2-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து வரும் மாா்ச் 2-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளன. முகாமில், 1,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வினை நடத்தவுள்ளன. 18 முதல் 35 வயதுக்கு உள்பட்டவா்கள், பட்டதாரிகள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களுடன் பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் மாா்ச் 2-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து பயன் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு, 044-27237124 என்ற வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்.