கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் குணவதி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் முருகம்மாள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ரூ. 3 ஆயிரம் தொகுப்பூதியம் அடிப்படையில் பணி நியமனம் செய்வதை தடை செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியா்களைக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும், சத்துணவு திட்டத்தில் பத்து ஆண்டுகளாக தொடா்ந்து பணியாற்றும் ஊழியா்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் அரசின் பிற துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் பணி அமா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா்.
தொடர்புடையது

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக கட்சியினா் போா்க்கொடி

கிருஷ்ணகிரியில் தோ்தல் விழிப்புணா்வு ஊா்வலம்

அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா்கள், ஊழியா்கள் போராட்டம்: மாணவா்கள் சங்கம் ஆதரவு

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

