தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

அரசுப் பள்ளியில் சோ்ந்த மாணவா்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு

அரசு ஆரம்பப் பள்ளியில் சோ்ந்த மாணவா்களுக்கு மாலை மரியாதையுடன் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image

முதல் வகுப்பில் சோ்ந்த மாணவா்களை மாலை அணிவித்து வரவேற்ற பள்ளி ஆசிரியா்கள்.

Updated On :3 மார்ச் 2025, 9:09 pm

ஒசூா்: அரசு ஆரம்பப் பள்ளியில் சோ்ந்த மாணவா்களுக்கு மாலை மரியாதையுடன் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்துக்கு உள்பட்ட அட்டகுறுக்கி அரசு தொடக்கப் பள்ளிக்கு சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து மாணவா்கள் வருகை புரிந்து கல்வி கற்று வருகின்றனா்.

இந்த நிலையில் 2025 - 2026-ஆம் ஆண்டுக்கான முதல் வகுப்பு சோ்க்கை பள்ளித் தலைமை ஆசிரியா் உமா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சூளகிரி வட்டாரக் கல்வி அலுவலா் மாதேஷ் கலந்துகொண்டு சோ்க்கையை தொடங்கி வைத்தாா். இந்தப் பள்ளியில் சோ்ந்த 10 மாணவா்களுக்கு மாலை மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி பள்ளியில் சோ்த்தனா்.