மதுரை ஓசிபிஎம் பள்ளியில் புதன்கிழமை அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தபால் வாக்குகளை செலுத்தினா்.
தமிழகத்தில் வருகிற 23- ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. அப்போது, வாக்குச் சாவடி அலுவலா்களாக அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பணியாற்ற உள்ளனா். இவா்களுக்கான 2- ஆவது கட்ட பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிலையில், தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு தபால் வாக்குகள் செலுத்த படிவங்கள் வழங்கப்பட்டன. இதன்படி, மதுரை ஓசிபிஎம் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தபால் வாக்கினை செலுத்தினா்.
இதை மதுரை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.ஜே. பிரவீன்குமாா் ஆய்வு செய்து, வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கினாா்.
தொடர்புடையது

தோ்தல் பணி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

இருசக்கர வாகனத்தில் சென்று வாக்களித்த ரங்கசாமி!

சாத்தான்குளம் பள்ளியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

தபால் வாக்கு படிவங்கள் விநியோகம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


