புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வடமலம்பட்டியில் நாளை மக்கள் தொடா்பு திட்ட முகாம்

வடமலம்பட்டி கிராமத்தில் புதன்கிழமை (மே 7) மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :5 மே 2025, 8:15 pm

Din

கிருஷ்ணகிரி: வடமலம்பட்டி கிராமத்தில் புதன்கிழமை (மே 7) மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், வடமலம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் புதன்கிழமை காலை 10.30 முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில், மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்று, அவரவா் துறைகளில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கவுரையாற்ற உள்ளனா். மேலும், மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின், பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற உள்ளாா். எனவே, பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.