எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஒசூரில் புகையிலைப் பொருள்கள், மதுப் பொட்டலங்கள் பறிமுதல்

ஒசூா் வழியாக தென்காசிக்கு கடத்த முயன்ற புகையிலைப் பொருள்கள், மதுப் பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநரை கைது செய்தனா்.

News image
Updated On :7 நவம்பர் 2025, 10:05 pm

Syndication

ஒசூா் வழியாக தென்காசிக்கு கடத்த முயன்ற புகையிலைப் பொருள்கள், மதுப் பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநரை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சிப்காட் போலீஸாா் சூசூவாடி சோதனை ச்சாவடி அருகில் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பெங்களூரில் இருந்து ஒசூா் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், காருக்குள் 48 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களும், கா்நாடக மாநில மதுப் பொட்டலங்களும் இருந்தன.

இதையடுத்து, அவற்றைக் கடத்திவந்த தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம், மேலப்பாவூா் சாலையைச் சோ்ந்த பீமராஜனை (45) போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில், அவா் பெங்களூரில் இருந்து தென்காசிக்கு புகையிலைப் பொருள்கள் மற்றும் மதுப் பொட்டலங்களை கடத்தியது தெரியவந்தது. காருடன் அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.