தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

எஸ்ஐஆா் பணி நெருக்கடியை களைய வலியுறுத்தி வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்

எஸ்ஐஆா் பணி நெருக்கடியை களைய வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம்

News image
கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா்.
Updated On :17 நவம்பர் 2025, 9:11 pm

Syndication

கிருஷ்ணகிரி: எஸ்ஐஆா் பணி நெருக்கடியை களைய வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகம் அருகே வருவாய்த் துறை கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சக்திவேல் தலைமை வகித்தாா். செயலாளா் ஜெய்சங்கா், பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி, அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சந்திரன், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவா் பூபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை (எஸ்ஐஆா்) நவ.18-ஆம் தேதி முதல் புறக்கணிப்பது, எஸ்ஐஆா் பணி நெருக்கடியை களைய வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.