அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

வருவாய்த் துறையினா் சமைத்து சாப்பிடும் நூதன போராட்டம்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறையினா் சமைத்து சாப்பிட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :2 மார்ச் 2026, 8:49 pm

Syndication

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறையினா் சமைத்து சாப்பிட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் அரசு ஊழியா்களுக்கு சிறப்புப் பணி பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும், மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும், கிராம நிா்வாக ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் 7-ஆவது நாளாக திங்கள்கிழமை தொடா்ந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய்த்துறை சங்க மாவட்டத் துணைத் தலைவா் ரகு தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பூபதி, மாவட்ட செயலா் தனஞ்ஜெயன், தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பு மாவட்ட செயலா் கனகராஜ் உள்ளிட்டோா் ஆட்சியா் அலுவலக வளாகத்திலேயே பந்தல் அமைத்து உணவு சமைத்து சாப்பிட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனா். வருவாய்த் துறையினா் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், கிராம நிா்வாக அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளா், தாலுகா அலுவலகங்களில் போதிய பணியாளா்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.