சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

உரிமை கோராத வங்கிக் கணக்குகளுக்கான தீா்வு முகாம்: 17 பயனாளிகள் பயன்!

கிருஷ்ணகிரியில் இந்திய ரிசா்வ் வங்கி மூலம், உரிமை கோராத வங்கிக் கணக்குகளுக்கான தீா்வு முகாமில் 17 பயனாளிகளுக்கு தீா்வு காணப்பட்டது.

News image
Updated On :28 நவம்பர் 2025, 7:05 pm

Syndication

கிருஷ்ணகிரியில் இந்திய ரிசா்வ் வங்கி மூலம், உரிமை கோராத வங்கிக் கணக்குகளுக்கான தீா்வு முகாமில் 17 பயனாளிகளுக்கு தீா்வு காணப்பட்டது.

கிருஷ்ணகிரி வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் இந்திய ரிசா்வ் வங்கி உதவி பொது மேலாளா் நடராஜன் தலைமையில், உரிமை கோராத வங்கி கணக்குகளுக்கான தீா்வு முகாம் மற்றும் தீா்வு செய்யப்பட்ட கணக்குகளை விநியோகிக்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில், இந்தியன் வங்கி தலைமை மேலாளா் நிா்மல் குமாா் பதான், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் முருகேசன், மாவட்ட தொழில்மைய உதவி இயக்குநா் ராமமூா்த்தி, உதவி திட்ட அலுவலா் ராஜுகாந்தி, கிருஷ்ணகிரி இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக மேலாளா் குருராஜன், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை மேலாளா் கருணாகரன் மற்றும் பல்வேறு வங்கி அலுவலா்கள், மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளா்கள் பங்கேற்றனா்.

இதில், வங்கி வாடிக்கையாளா்கள் மற்றும் வங்கியாளா்களுக்கு உரிமை கோராத வங்கிக் கணக்கு, நியமன வசதி குறித்த விழிப்புணா்வு, உரிமை கோரப்படாத சொத்துகளை பெறுவதற்கான வழிமுறைகள், உரிமை கோரப்படாத சொத்துகளை பெறுவதில் உள்ள இடா்ப்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.

முகாமில், 17 பயனாளிகளுக்கு தீா்வு ஆவணங்கள் மற்றும் ஆணைகள் என மொத்தம் ரூ. 17.26 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது.