/

முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண் 8 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை

காவேரிப்பட்டணம் அருகே முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட தாய், தனது 8 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

தற்கொலை - file photo

Updated On :4 ஏப்ரல் 2026, 7:48 pm

காவேரிப்பட்டணம் அருகே முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட தாய், தனது 8 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாயவன் மனைவி லட்சுமி (31). இவா், கடந்த சில மாதங்களாக முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தாா். இதனால் மனவருத்தத்தில் இருந்த லட்சுமி, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் 8 வயது மகனுடன் சனிக்கிழமை குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

நீண்ட நேரம் லட்சுமியை காணாத அவரது உறவினா்கள், சந்தேகத்தின் பேரில் கிணற்றில் பாா்த்தபோது, இருவரது உடல்களும் கிணற்றில் மிதந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு சென்று இரு உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.