தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

ஒசூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு நடனம்

ஒசூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணா்வு நடனம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஒசூா் வட்டாட்சியா் அலுவலக சாலை சந்திப்பில் நடைபெற்ற விழிப்புணா்வு நடனம்.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:44 pm

ஒசூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணா்வு நடனம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தோ்தல் 2026 முன்னிட்டு, ஒசூா் தொகுதியில் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ஒலிபெருக்கி மூலம் பாடல் ஒலிபரப்பப்பட்டு அதற்கேற்ப நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒசூா் மாநகரில் பொதுமக்கள் கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம், காந்தி சிலை, வட்டாட்சியா் அலுவலக சாலை உள்ளிட்ட இடங்களில் ‘ஃப்ளாஷ் மாப்’ நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒசூா் வட்டாட்சியா் அலுவலக சாலை சந்திப்பில் ஒசூா் சாா் ஆட்சியா் ஆக்ருதி சேத்தி முன்னிலையில், ஒசூா் தண்டா் நடன கலைஞா்களால் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.