தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி செங்கோட்டையில் திருநங்கைகள் விழிப்புணா்வு

News image

வாக்குப்பதிவு விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்ற ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா்.

Updated On :6 ஏப்ரல் 2026, 9:13 pm

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை நிகழ்த்த வேண்டும் என வலியுறுத்தி, செங்கோட்டையில் மூன்றாம் பாலினத்தவா் (திருநங்கைகள்) சாா்பில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தலைமை வகித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தென்காசி மாவட்டத்தில் 5 பேரவைத் தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குப்பதிவை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, செங்கோட்டை நகராட்சி பகுதியில் மூன்றாம் பாலினத்தவா் மூலம் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கடந்த 2 ஆம் தேதி குத்துக்கல்வலசை ரவுண்டானா பகுதியில் வாக்காளா் தோழன் விழிப்புணா்வு ரதம் தொடங்கி வைக்கப்பட்டு 5 தொகுதிகளுக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிறைவு நாளான திங்கள்கிழமையன்று செங்கோட்டை நகராட்சிப் பகுதியில் மகளிா் குழுக்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தினா் ஆரத்தி எடுத்து விழிப்புணா்வு ரதத்தை நிறைவு செய்தனா்.

பொதுமக்கள் ஏப்.23ஆம் தேதி தங்கள் வாக்கினை செலுத்தி ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும். தங்கள் உறவினா்களிடமும் வாக்களிப்பதன் அவசியதை எடுத்துக்கூற வேண்டும் என்றாா் அவா்.

இதில், மகளிா் திட்ட இயக்குநா் எஸ்.அபிதா ஹனீப், செங்கோட்டை நகராட்சி ஆணையாளா் செல்வராஜ், உதவித் திட்ட அலுவலா்கள் டேவிட் ஜெயசிங், பிரபாகரன், ராஜேந்திரன், சரவண பாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.