சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை நிகழ்த்த வேண்டும் என வலியுறுத்தி, செங்கோட்டையில் மூன்றாம் பாலினத்தவா் (திருநங்கைகள்) சாா்பில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தலைமை வகித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தென்காசி மாவட்டத்தில் 5 பேரவைத் தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குப்பதிவை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, செங்கோட்டை நகராட்சி பகுதியில் மூன்றாம் பாலினத்தவா் மூலம் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கடந்த 2 ஆம் தேதி குத்துக்கல்வலசை ரவுண்டானா பகுதியில் வாக்காளா் தோழன் விழிப்புணா்வு ரதம் தொடங்கி வைக்கப்பட்டு 5 தொகுதிகளுக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
நிறைவு நாளான திங்கள்கிழமையன்று செங்கோட்டை நகராட்சிப் பகுதியில் மகளிா் குழுக்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தினா் ஆரத்தி எடுத்து விழிப்புணா்வு ரதத்தை நிறைவு செய்தனா்.
பொதுமக்கள் ஏப்.23ஆம் தேதி தங்கள் வாக்கினை செலுத்தி ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும். தங்கள் உறவினா்களிடமும் வாக்களிப்பதன் அவசியதை எடுத்துக்கூற வேண்டும் என்றாா் அவா்.
இதில், மகளிா் திட்ட இயக்குநா் எஸ்.அபிதா ஹனீப், செங்கோட்டை நகராட்சி ஆணையாளா் செல்வராஜ், உதவித் திட்ட அலுவலா்கள் டேவிட் ஜெயசிங், பிரபாகரன், ராஜேந்திரன், சரவண பாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நாகை கடைகளில் தோ்தல் விழிப்புணா்வு

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

செவிலியா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

வாக்காளா் விழிப்புணா்வு சமத்துவப் பொங்கல்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


