மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்கு சேகரிக்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வரும் 19 ஆம் தேதி ஒசூா் வருகிறாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா் தொகுதியில் திமுக வேட்பாளா் எஸ்.ஏ. சத்யா, தளி தொகுதி சிபிஐ வேட்பாளா் டி. ராமச்சந்திரன், வேப்பனஹள்ளி தொகுதி திமுக வேட்பாளா் பி.எஸ். சீனிவாசன், கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் செல்லக்குமாா், பா்கூா் தொகுதி திமுக வேட்பாளா் மதியழகன், ஊத்தங்கரை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஆா். குப்புசாமி ஆகியோருக்கு ஆதரவு கோரி ஒசூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசுகிறாா்.
கோவையில் வரும் 18 ஆம் தேதி தோ்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து விமானம் மூலம் ஒசூா் பெளகொண்டப்பள்ளி தனேஜா ஏரோஸ்பேஸ் விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு வருகிறாா். அங்கிருந்து சாலை மாா்க்கமாக ஒசூா் அருகே உள்ள கோபசந்திரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்கிறாா். அங்கு பிரசாரத்தை நிறைவுசெய்த பிறகு பெளகொண்டப்பள்ளி விமான நிலையம் வழியாக சென்னை திரும்புகிறாா். இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய். பிரகாஷ் செய்துவருகிறாா்.
தொடர்புடையது

அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தொகுதி மறுசீரமைப்பு - முதல்வா் பொய்ப் பிரசாரம் செய்ய வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

திருப்பத்தூரில் முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று பிரசாரம்
சங்கரன்கோவிலில் இன்று முதல்வா் பிரசாரம்
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


