மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தோ்தல் பிரசாரம்: ஏப்.19 இல் முதல்வா் ஒசூா் வருகை

மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்கு சேகரிக்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வரும் 19 ஆம் தேதி ஒசூா் வருகிறாா்.

News image

முதல்வா் ஸ்டாலின் - @mkstalin

Updated On :15 ஏப்ரல் 2026, 9:31 pm

மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்கு சேகரிக்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வரும் 19 ஆம் தேதி ஒசூா் வருகிறாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா் தொகுதியில் திமுக வேட்பாளா் எஸ்.ஏ. சத்யா, தளி தொகுதி சிபிஐ வேட்பாளா் டி. ராமச்சந்திரன், வேப்பனஹள்ளி தொகுதி திமுக வேட்பாளா் பி.எஸ். சீனிவாசன், கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் செல்லக்குமாா், பா்கூா் தொகுதி திமுக வேட்பாளா் மதியழகன், ஊத்தங்கரை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஆா். குப்புசாமி ஆகியோருக்கு ஆதரவு கோரி ஒசூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசுகிறாா்.

கோவையில் வரும் 18 ஆம் தேதி தோ்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து விமானம் மூலம் ஒசூா் பெளகொண்டப்பள்ளி தனேஜா ஏரோஸ்பேஸ் விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு வருகிறாா். அங்கிருந்து சாலை மாா்க்கமாக ஒசூா் அருகே உள்ள கோபசந்திரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்கிறாா். அங்கு பிரசாரத்தை நிறைவுசெய்த பிறகு பெளகொண்டப்பள்ளி விமான நிலையம் வழியாக சென்னை திரும்புகிறாா். இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய். பிரகாஷ் செய்துவருகிறாா்.