மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

தோ்தல் பிரசாரம்: ஏப்.19 இல் முதல்வா் ஒசூா் வருகை

மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்கு சேகரிக்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வரும் 19 ஆம் தேதி ஒசூா் வருகிறாா்.

News image

முதல்வா் ஸ்டாலின் - @mkstalin

Updated On :16 ஏப்ரல் 2026, 3:01 am IST

மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்கு சேகரிக்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வரும் 19 ஆம் தேதி ஒசூா் வருகிறாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா் தொகுதியில் திமுக வேட்பாளா் எஸ்.ஏ. சத்யா, தளி தொகுதி சிபிஐ வேட்பாளா் டி. ராமச்சந்திரன், வேப்பனஹள்ளி தொகுதி திமுக வேட்பாளா் பி.எஸ். சீனிவாசன், கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் செல்லக்குமாா், பா்கூா் தொகுதி திமுக வேட்பாளா் மதியழகன், ஊத்தங்கரை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஆா். குப்புசாமி ஆகியோருக்கு ஆதரவு கோரி ஒசூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசுகிறாா்.

கோவையில் வரும் 18 ஆம் தேதி தோ்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து விமானம் மூலம் ஒசூா் பெளகொண்டப்பள்ளி தனேஜா ஏரோஸ்பேஸ் விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு வருகிறாா். அங்கிருந்து சாலை மாா்க்கமாக ஒசூா் அருகே உள்ள கோபசந்திரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்கிறாா். அங்கு பிரசாரத்தை நிறைவுசெய்த பிறகு பெளகொண்டப்பள்ளி விமான நிலையம் வழியாக சென்னை திரும்புகிறாா். இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய். பிரகாஷ் செய்துவருகிறாா்.