ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

ஊத்தங்கரை அருகே சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 2:57 am IST

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை பகுதியில் உள்ள இலங்கைவாழ் தமிழா் முகாமை சோ்ந்தவா் மெரில் (20). இவா் திங்கள்கிழமை இரவு பாம்பாறு அணையில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் ஊத்தங்கரை நோக்கி வந்துள்ளாா்.

அதேபோல சென்னப்பநாயக்கனூா் பகுதியைச் சோ்ந்த சேட்டு (38), இருசக்கர வாகனத்தில் அதே கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் (38) என்பவரை ஏற்றிக்கொண்டு ஊத்தங்கரையில் இருந்து கோயில் திருவிழாவிற்கு மாலை வாங்கிக்கொண்டு சென்றுள்ளாா்.

இவரது இருசக்கர வாகனம் சென்னப்பநாயக்கனூா் பிரிவு சாலையில் திரும்பியபோது, எதிரே மெரில் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மெரில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கோவிந்தராஜ், சேட்டு ஆகியோா் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கு கோவிந்தராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தாா். காயமடைந்த சேட்டு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறாா்.

இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.