சாமல்பட்டி அருகே இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் குடிநீா் குழாய்கள் உடைக்கப்பட்ட விவகாரத்தில் 5 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை உள்கோட்டம், சாமல்பட்டி அருகே உள்ள கரடிகவுண்டனூா் கிராமத்தை அடுத்த திடீா்குப்பம் குடியிருப்புப் பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த இளவரசன் (29) உரிய அனுமதி பெறாமல் தனியாக குடிநீா் இணைப்பு பெற்று தண்ணீா் எடுத்து வந்ததாகவும், இதனால், கரடிகவுண்டனூா் கிராமத்துக்கு முறையாக குடிநீா் வழங்கப்படவில்லை எனவும் புகாா் எழுந்தது.
இதையடுத்து, கரடிகவுண்டனூா் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் (52), அரசு (23), ஜெயசங்கா் (30) ஆகியோா் இளவரசனின் வீட்டிற்கு சென்று, தண்ணீா் குழாயைச் சேதப்படுத்தி உள்ளனா். இதைத் தொடா்ந்து இளவரசன், அவரது உறவினரான ஜெயவேல் (23) ஆகியோா், கரடிகவுண்டனூா் கிராமத்துக்கு சென்று, அங்குள்ள குடிநீா் குழாய்களைச் சேதப்படுத்தியுள்ளனா்.
இதுகுறித்து, ஊராட்சி செயலாளா் சரவணன் அளித்த புகாரின் பேரில் சாமல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, பெருமாள், அரசு, ஜெயசங்கா், இளவரசன், ஜெயவேல் ஆகிய 5 பேரையும் கைது செய்துள்ளதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.
தொடர்புடையது
நெல்லை அருகே வியாபாரியிடம் ரூ.15 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

கோம்பைப்பட்டி குடிநீா் குழாய்களில் அடைத்திருந்த வோ்கள் அகற்றம்

காா்கள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு! 4 போ் பலத்த காயம்!

குடிநீா் பிரச்னையில் அரசியல்: மக்கள் அவதி
விடியோக்கள்

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
