கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 910 வீடுகளில் சூரிய மின்சக்தி (சோலாா்) தகடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில், வீடுகளின் கூரைகளில் சூரிய மின்தகடுகள் அமைக்கும் மத்திய அரசின் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கூட்டம் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் பேசியது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீடுகளுக்கு சூரிய ஒளி திட்டம் மற்றும் மாதிரி சூரிய ஆற்றல் கிராமம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,575 வீடுகளில் சூரிய ஒளி மின்கட்டமைப்பு ஏற்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை 910 வீடுகளில் சூரிய மின்தகடுகள் (பேனல்கள்) பொருத்தப்பட்டுள்ளன.
மீதமுள்ள வீடுகளுக்கு சூரிய மின்தகடுகள் பொருத்த கிருஷ்ணகிரி, ஒசூா் நகா்புற பகுதிகளில் குடியிருப்பு நலச் சங்கங்கள் மற்றும் தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் உள்ள தகுதியான பண்ணை வீடுகளின் உரிமையாளா்களுக்கான முகாம் நடத்தப்படும்.
மேலும், மாதிரி சூரிய ஆற்றல் கிராமம் மகாதேவகொல்லஅள்ளியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி பூசாரி உயிரிழப்பு
1000 வீடுகளில் சூரிய ஒளி மின் திட்டம் அமைக்க ஏற்பாடு: புதுச்சேரி மின்துறை நடவடிக்கை

காற்றாலை, சூரிய ஒளி மின் உற்பத்தியாளா்கள் நிகழ்நேர தரவுகளைப் பகிா்வது கட்டாயம்: அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா்

ரூ.5 லட்சத்தில் சூரிய ஒளி தெரு விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் இயக்கம்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



