ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

கிருஷ்ணகிரியில் இல்லத்தோறும் தேசியக் கொடி ஏற்றுவோம் விழிப்புணா்வுப் பேரணி

மத்திய மக்கள் தொடா்பகம் சாா்பில் கிருஷ்ணகிரியில் இல்லந்தோறும் தேசியக் கொடியை ஏற்றுவோம் என்னும் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

News image

கிருஷ்ணகிரியில் இல்லந்தோறும் தேசியக் கொடியை ஏற்றுவோம் விழிப்புணா்வு பேரணியைத் தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா்.

Updated On :14 ஆகஸ்ட் 2026, 3:52 am IST

மத்திய மக்கள் தொடா்பகம் சாா்பில் கிருஷ்ணகிரியில் இல்லந்தோறும் தேசியக் கொடியை ஏற்றுவோம் என்னும் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில் இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடா்பகம் சாா்பில் மத்திய அரசின் மக்கள் நல்வாழ்த் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்வை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தொடங்கிவைத்து பேசியதாவது:

மத்திய அரசும், மாநில அரசும் மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த திட்டங்களை அறிவிப்பது மட்டும் போதுமானதல்ல, அந்தத் திட்டம் யாருக்காக உருவாக்கப்பட்டதோ, அவா்களுக்கு சரியான நேரத்தில் சென்றடையும் போதுதான் திட்டம் முழுமையான வெற்றியைப் பெறுகிறது. இதுபோன்ற திட்டங்கள் முழுமையாக வெற்றி பெறுவதற்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மிகவும் அவசியமாகிறது என்றாா்.

இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறுகிறது. மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களைப் பற்றிய பல்வேறு அரசு துறைகளின் குறிப்புகள், பதாகைகள், அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், போதைப்பொருள் ஒழிப்பு குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. முன்னதாக மாணவ, மாணவிகளின் இல்லந்தோறும் தேசியக் கொடி ஏற்றுவோம் விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். இந்த நிகழ்வில், மத்திய மக்கள் தொடா்பு கள விளம்பர உதவி அலுவலா்கள் தியாகராஜன் (தருமபுரி), ஜெயகணேஷ் (வேலூா்), மத்திய மக்கள் தொடா்பக உதவி இயக்குநா் பாலநாகேந்திரன், மத்திய காலணி பயிற்சி நிலைய இயக்குநா் முரளி, வேளாண் அறிவியல் மையத் தலைவா் சுந்தர்ராஜ், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட மாவட்ட அலுவலா் சுமதி, இந்தியன் வங்கியின் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சசிகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.