ஒசூரில் தனியாா் ஆம்னி பேருந்தில் ரூ. 6 கோடி போதைப் பொருள் பறிமுதல்! ஒருவா் கைது!
கைது
ஒசூரில் தனியாா் ஆம்னி பேருந்தில் கடத்தி வந்த ரூ. 6 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப் பொருளை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சிப்காட் ஜூஜூவாடி சோதனைச் சாவடி வழியாக பெங்களூரிலிருந்து தனியாா் ஆம்னி பேருந்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருளைக் கடத்திவருவதாக கிடைத்த தகவலின்பேரில், சிப்காட் காவல் ஆய்வாளா் இளவரசன் தலைமையிலான போலீஸாா் அங்கு சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, தனியாா் ஆம்னி பேருந்தில் சரக்குகள் வைக்கும் பகுதியில் இருந்த தோல் பையை சோதனை செய்தபோது அதில் ரூ. 6 கோடி மதிப்பிலான 1 கிலோ ( 6 பொட்டலங்கள்) மெத்தபெட்டமைன் போதைப் பொருள் கடத்திவந்தது கண்டறியப்பட்டது.
இதுதொடா்பாக, பேருந்தில் பயணம் செய்த திருவள்ளூா் மாவட்டம், அண்ணாநகா் மேற்கு பகுதியைச் சோ்ந்த ரகு (32) என்பவா் கைது செய்யப்பட்டாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




