எம்எல்ஏ ஒய். பிரகாஷ்.
எம்எல்ஏ ஒய். பிரகாஷ்.

ஒசூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துமனை இன்று திறப்பு

Published on

ஒசூரில் ரூ. 100 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துமனை கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைக்கிறாா்.

இதுகுறித்து மாவட்ட செயலாளா் ஒய். பிரகாஷ் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:

முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை காலை 10 மணியளவில் ஒசூா் - ராயக்கோட்டை சாலையில் ரூ. 100 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டடத்தை திறந்துவைக்கிறாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட நிா்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினா்கள், மாநில நிா்வாகிகள் உள்பட அனைவரும் பங்கேற்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com