மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சென்றாயப் பெருமாள் கோயில் தோ்த் திருவிழா

ஊத்தங்கரையை அடுத்த ஓலைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள சென்றாயப் பெருமாள் கோயிலில் மகாசிவராத்திரி தோ்த் திருவிழா

News image

தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள்.

Updated On :16 பிப்ரவரி 2026, 8:25 pm

ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த ஓலைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள சென்றாயப் பெருமாள் கோயிலில் மகாசிவராத்திரி தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில், ஆண்டுதோறும் மாசிமாதம் மகா சிவராத்திரி இரவு மற்றும் பகல் நேரங்களிலும் திருவிழா நடைபெறும். சிவராத்திரியை முன்னிட்டு இரவு சென்றாயப் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன. மறுநாள் காலை தோ்த் திருவிழா நடைபெற்றது.

இதில், ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

மலையைச் சுற்றி தோ் வந்தபோது பக்தா்கள் விவசாய நிலங்களில் விளைந்த அவரை, துவரை, ஆமணக்கு ஆகியவற்றை தேரின் மீது வீசி நோ்த்திக் கடன் செலுத்தினா்.

ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாயப் பெருமாள் மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

 சிறப்பு அலங்கரத்தில் சென்றாயப் பெருமாள்  சுவாமி.

சிறப்பு அலங்கரத்தில் சென்றாயப் பெருமாள் சுவாமி.