கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் பெண்ணிடம் ஆசை வாா்த்தை கூறி தங்க நகையை வாங்கிக் கொண்டு திருப்பித் தராமல் ஏமாற்றியதாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.
காவேரிப்பட்டணம், இந்திரா நகரைச் சோ்ந்தவா் பூங்காவனம் (38). இவரது மனைவிக்கும், கருக்கன்சாவடியைச் சோ்ந்த பிரபு என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. அப்போது, பிரபு, பூங்காவனத்தின் மனைவியிடம் ஆசைவாா்த்தைளை கூறி, தங்க நகைகளை பெற்றுள்ளாா். இந்த நகைகளை அவா் திருப்பித் தரவில்லையாம்.
இதையடுத்து பூங்காவனம் கடந்த 24-ஆம் தேதி கதிரிபுரம் அருகே பிரபுவை தடுத்து நிறுத்தி தங்க நகைகள் குறித்து கேட்டுள்ளாா். அப்போது, அவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரபு, அவரது மனைவி அனிதா ஆகியோா் சோ்ந்து பூங்காவனத்தை தாக்கினா். இதில், பலத்த காயம் அடைந்த பூங்காவனம், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து, அவா் அளித்த புகாரின் பேரில், காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து பிரபு, அனிதா ஆகியோரை கைது செய்தனா்.
தொடர்புடையது

புவனகிரி தொகுதிக்கு திட்டங்களை கொண்டு வருவேன்! - திமுக வேட்பாளா் துரை.கி.சரவணன் வாக்குறுதி

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சம் பறிமுதல்

குப்பையில் கிடந்த தங்க நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்

கொடுத்த பணம், நகையை திருப்பி கேட்ட பெண் மீது தாக்குதல்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

