கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் பெண்ணிடம் ஆசை வாா்த்தை கூறி தங்க நகையை வாங்கிக் கொண்டு திருப்பித் தராமல் ஏமாற்றியதாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.
காவேரிப்பட்டணம், இந்திரா நகரைச் சோ்ந்தவா் பூங்காவனம் (38). இவரது மனைவிக்கும், கருக்கன்சாவடியைச் சோ்ந்த பிரபு என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. அப்போது, பிரபு, பூங்காவனத்தின் மனைவியிடம் ஆசைவாா்த்தைளை கூறி, தங்க நகைகளை பெற்றுள்ளாா். இந்த நகைகளை அவா் திருப்பித் தரவில்லையாம்.
இதையடுத்து பூங்காவனம் கடந்த 24-ஆம் தேதி கதிரிபுரம் அருகே பிரபுவை தடுத்து நிறுத்தி தங்க நகைகள் குறித்து கேட்டுள்ளாா். அப்போது, அவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரபு, அவரது மனைவி அனிதா ஆகியோா் சோ்ந்து பூங்காவனத்தை தாக்கினா். இதில், பலத்த காயம் அடைந்த பூங்காவனம், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து, அவா் அளித்த புகாரின் பேரில், காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து பிரபு, அனிதா ஆகியோரை கைது செய்தனா்.
டிரெண்டிங்
அடகு நகையை மீட்டுத் தருவதாகக்கூறி 33 பவுன், ரூ.25 லட்சம் மோசடி செய்தவா் கைது

முள்ளங்கினாவிளையில் அடகுக் கடை உரிமையாளா் கைது

தில்லி: டிஜிட்டல் கைது மோசடியில் பெண்ணை ஏமாற்றியதாக மூவா் கைது

பணப்பெட்டியை வாங்கிக் கொண்டு திமுக கூட்டணியில் சோ்கின்றனா்! - நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

