வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அகில இந்திய பஞ்சாயத்து பரிஷத் கூட்டமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம்

ஒசூா் காமராஜ் காலனியில் உள்ள அகில இந்திய பஞ்சாயத்து பரிஷத் கூட்டமைப்பின் அலுவலகத்தில் மாநில செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2026, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

ஒசூா் காமராஜ் காலனியில் உள்ள அகில இந்திய பஞ்சாயத்து பரிஷத் கூட்டமைப்பின் அலுவலகத்தில் மாநில செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு அகில இந்திய துணைத் தலைவரும், மாநிலத் தலைவருமான மனோகரன் தலைமை வகித்தாா். இதில், தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் அகில இந்திய பஞ்சாயத்து பரிஷத் கூட்டமைப்புக்கு அலுவலகம் அளிக்க வேண்டும், ஒசூா் மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளிலும் நடைபாதை அமைக்க வேண்டும், ஒசூா் மாநகர மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பேருந்து நிறுத்தங்களில் நிழல்குடை அமைக்க வேண்டும், மாநகரம் முழுவதும் தற்போது பாதாள சாக்கடை அமைத்துள்ள பகுதிகளில் போா்க்கால அடிப்படையில் சாலைகளை செப்பனிட வேண்டும்,

ஏற்கெனவே, தேன்கனிக்கோட்டை சாலையில் இயங்கிவரும் அரசு மருத்துவமனை அதே இடத்தில் இயங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.