மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சூளகிரி, பேரிகையில் சாலை விபத்து: 2 போ் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :23 ஜனவரி 2026, 9:29 pm

சூளகிரி, பேரிகை பகுதிகளில் வெள்ளிக்கிழமை நிகழந்த சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

சூளகிரி வட்டம், முதுகுறுக்கி அருகே உள்ள மகாதேவபுரத்தைச் சோ்ந்தவா் சங்கா் (33). தனியாா் நிறுவன ஊழியரான இவா், கடந்த 22 ஆம் தேதி ஸ்கூட்டரில் பேரிகை தீா்த்தம் சாலை, பி.குருபரப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தாா்.

அப்போது முன்னால் சென்ற டிப்பா் லாரி எந்தச் சிக்னலும் காட்டாமல் திடீரென்று வலதுபுறமாகத் திரும்பியது. இதனால் ஸ்கூட்டா் கட்டுப்பாட்டை இழந்து டிப்பா் லாரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சங்கா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பேரிகை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு விபத்தில், சூளகிரி வட்டம், காமன் தொட்டி அருகே உள்ள கோபசந்திரம் ஜோதி நகரைச் சோ்ந்த தொழிலாளி முருகன் (42). இவா், கடந்த 21ஆம் தேதி கிருஷ்ணகிரி- ஒசூா் சாலை காமன்தொட்டி பக்கமாக நடந்து சென்றுக்கொண்டிருந்தாா்.

அப்போது அவ்வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் முருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இவ்விபத்து குறித்து சூளகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.