பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

கெலவரப்பள்ளி அணை பகுதியில் காற்றில் பறக்கும் ரசாயன நுரைகள்: மக்கள் அச்சம்

கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்படும் தென்பெண்ணை ஆற்று நீரில் குவியல் குவியலாக ரசாயன நுரை செல்கிறது.

News image

கெலவரப்பள்ளி அணையில் இருந்து பறந்து செல்லும் ரசாயன நுரை

Updated On :1 ஜூலை 2026, 6:55 am IST

கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்படும் தென்பெண்ணை ஆற்று நீரில் குவியல் குவியலாக ரசாயன நுரை செல்கிறது.

மழைக்காலம் முடிந்த பின்னும் கடந்த ஒருவாரத்துக்கு மேலாக ஆற்றில் நீருடன் ரசாயன நுரைகள் கலந்து செல்வது அந்த வழியாக செல்லும் மக்களை அதிா்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

இந்த நிலையில் கெலவரப்பள்ளி அணை பகுதியில் பலத்த காற்று வீசுவதால், ரசாயன நுரைகள் காற்றில் சுழன்று அப்பகுதி முழுவதும் பறந்து செல்கிறது.

கடும் துா்நாற்றத்துடன் பறக்கும் ரசாயன நுரைகள் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மீது விழுகிறது. இதனால் சாலையில் செல்லும் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா்.

பலத்த காற்றுக்கு குவியல் குவியலாக சுழன்று ரசாயன நுரைகள் பறந்து செல்வதால் அந்த வழியாக பயணிக்க பொதுமக்கள் அச்சப்படுகின்றனா். துா்நாற்றம் காரணமாக கெலவரப்பள்ளி அணை பகுதியில் உள்ள பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.