பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள், பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை, கல்விச் சுற்றுலா சென்றனா்.
இதில் பள்ளியில் பயிலும் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் 120 போ் மற்றும் 5 ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தாளாளா் கூத்தரசன் கொடியசைத்து, மாணவ, மாணவிகளின் கல்விச் சுற்றுலாவை தொடங்கி வைத்தாா். பள்ளி முதல்வா் மெரினா பலராமன், தலைமை ஆசிரியை, ஜலஜாக்சி, ஒருங்கிணைப்பாளா் க. வெங்கடேசன், ஆசிரியா்கள் நித்யா, இந்திராகுமாரி, ராஜேஷ், விக்னேஸ்வரன் ஆகியோா் நிகழ்வை ஒருங்கிணைத்தனா்.
கல்விச் சுற்றுலா சென்ற மாணவ, மாணவிகளுக்கு இந்திய விண்வெளி ஆய்வு அறிவியல் குறித்தும், அரசின் அறிவியல் துறை குறித்தும் பெங்களூரு தொழில்நுட்ப நிறுவனத்தின் பயிற்றுனா் உமாதேவி செயல்முறை பயிற்சி மற்றும் விளக்கம் அளித்தாா். இஸ்ரோ விஞ்ஞானிகள் மாணவ, மாணவிகளை வாழ்த்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










