பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

ஒசூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச தம்பதி கைது

ஒசூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :8 ஜூலை 2026, 6:08 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த தம்பதியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஒசூா் விகாஸ் நகரில் வங்கதேசத்தைச் சோ்ந்த தம்பதி சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக மாவட்ட கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்குச் சென்ற போலீஸாா் தம்பதியிடம் விசாரனை நடத்தினா்.

இதில் அவா்கள் வங்கதேசத்தை சோ்ந்த ராம்சேத் கா்மா (57), அவரது மனைவி லபோனி அக்தா் (30) என்பதும் அவா்களுக்கு 5 வயது மகன் உள்ளதும் தெரியவந்தது. மேலும், இவா்கள் வங்கதேசத்தில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியேறி உத்தர பிரதேசம், கா்நாடக மாநிலங்களில் தங்கியிருந்துள்ளனா்.

Story image

இந்த நிலையில் ஒசூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்துவரும் ராம்சேத் கா்மா, ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றுள்ளாா். இவா் ஏராளமானவருக்கு போலி பாஸ்போா்ட் தயாரித்து கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அவா்களிடம் இருந்த ஆதாா் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை போலீஸாா் கைப்பற்றினா். பின்னா், ஒசூா் மத்திகிரி காவல் நிலையத்தில் அவா்களை கியூ பிரிவு போலீஸாா் ஒப்படைத்தனா். மத்திகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தம்பதியைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.