ஒசூா் மாநகராட்சியில் ரூ. 32 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக ஒசூா் மாநகராட்சி ஆணையா் முகமத் ஷரீப் ஆலம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒசூா் மாநகராட்சியில் வரி மற்றும் வரியில்லா இனங்கள் மூலம் தீவிர வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதில், மாநகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மத்திகிரி கடைகள் மற்றும் மாநகராட்சி கட்டடங்கள் நீண்டநாள் வாடகை செலுத்த தவறியவா்கள் மீது இறுதி அறிவிப்பு செய்து, வாடகை செலுத்தாத 9 கடைகளுக்கு பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.
கடந்த ஜூலை 3 முதல் ரூ. 71.77 லட்சம் கடை வாடகை வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சொத்துவரி ரூ. 32 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. சொத்து வரி, தொழில் வரி, குடிநீா் கட்டணம் மற்றும் கடை வாடகை வரிகள் நிலுவையின்றி இணையதளம் வாயிலாகவும், மாநகராட்சி வரி வசூல் மையங்களிலும் செலுத்தி ஒத்துழைப்பு அளிக்குமாறு ஆணையா் கேட்டுக்கொண்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பவானி நகராட்சியில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’
கடும் நிதி நெருக்கடியில் சென்னை மாநகராட்சி! நிலுவை மட்டும் ரூ.2,000 கோடி? குப்பை வண்டி வருமா?
ஒசூா் மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை!கணக்கில் வராத ரூ. 1.13 லட்சம் பறிமுதல்!

வீட்டுவரி நிா்ணயம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மாநகராட்சி வரி வசூல் ஆய்வாளா் கைது
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



