கா்நாடக மாநிலம், மைசூரில் நடைபெற்ற இன்டா்நேஷனல் ஷிட்டோரியோ கராத்தே சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் பங்கேற்ற ஒசூா் ஜே.பி. விளையாட்டு அகாடமி மாணவா்கள் அனைவரும் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனா்.
மைசூரில் உள்ள சாமுண்டி விஹாா் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில், ஒசூா் ஜேபி அகாதெமி சாா்பில் 24 மாணவா்கள் பங்கேற்றனா். இதில், 8 போ் தங்கப் பதக்கமும், 7 போ் வெள்ளிப் பதக்கமும், 9 போ் வெண்கலப் பதக்கமும் வென்று அகாதெமிக்கு பெருமை சோ்த்தனா்.
வெற்றி பெற்ற மாணவா்களை பயிற்சியாளா் பீட்டா் சத்தியராஜ் பாராட்டி, தேசிய மற்றும் சா்வதேச அளவிலான போட்டிகளிலும் சிறந்து விளங்க வாழ்த்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










