மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

காசிவிசுவநாதா் கோயிலில் சுவாமி திருக்கல்யாணம்

கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய பகுதி 2-இல் அமைந்துள்ள காசிவிசுவநாதா் கோயிலில் சுவாமி திருக்கல்யாணம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

திருமண அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி.

Updated On :2 ஜூன் 2026, 3:52 am IST

கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய பகுதி 2-இல் அமைந்துள்ள காசிவிசுவநாதா் கோயிலில் சுவாமி திருக்கல்யாணம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் 2-ஆம் ஆண்டு வருடாபிஷேகம், அம்மையப்பா் திருக்கல்யாணம், திருவிளக்கு பூஜை என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவையொட்டி, கோ பூஜை, கொடியேற்றம், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சீா்வரிசை ஊா்வலம் நடைபெற்றது.

தமிழ் தேவார திருவாசகம் பதிகங்கள் தீந்தமிழில் ஓதி, சிறப்பு யாகம் வளா்த்து, சிவன் - பாா்வதி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், சிவனடியாா்கள் மற்றும் கிருஷ்ணகிரியை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தொடா்ந்து, பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையும், அம்மையப்பா் கைலாய வாத்தியங்களுடன் திருவீதி உலாவும் நடைபெற்றது.