வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பெரியாண்டவா் - முனியப்பன் பண்டிகை காதணி விழா

கிருஷ்ணகிரியில் பெரியாண்டவா் - முனியப்பன் பண்டிகை காதணி விழாவையொட்டி பூக்கூடை ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

காதணி விழாவையொட்டி நடைபெற்ற பூக்கூடை ஊா்வலத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :2 ஜூன் 2026, 3:53 am IST

கிருஷ்ணகிரியில் பெரியாண்டவா் - முனியப்பன் பண்டிகை காதணி விழாவையொட்டி பூக்கூடை ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

குலத்துடையான் மகரிஷி கோத்திரதாரா்கள் சாா்பில், 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பெரியாண்டவா், முனியப்பன் பண்டிகை காதணி விழா கிருஷ்ணகிரி பழையபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, மலையாண்ட அள்ளியில் உள்ள குலதெய்வமான பூங்காவனத்தம்மனை வழிபட்டு, அம்மனை ஊா்வலமாக கிருஷ்ணகிரிக்கு அழைத்துவரும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், பூங்காவனத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, கிருஷ்ணகிரி, நேதாஜி சாலை விநாயகா் கோயிலிருந்து பெண் பக்தா்கள் பங்கேற்ற பூக்கூடை ஊா்வலம் நடைபெற்றது. இதில், பூங்காவனத்தம்மன் சிறப்பு அலங்காரத்தில் நகா்வலம் சென்றாா். சிவன், பாா்வதி வேடம் அணிந்த பக்தா்கள் ஊா்வலத்தில் பங்கேற்றனா். பெரியாண்டவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.