/
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட பள்ளிவாசல்களில் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.
நாகா்கோவில், கோட்டாறு இளங்கடை பாபா காசிம் ஜும்ஆ மஸ்ஜித் பள்ளிவாசல் மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்று கூட்டுத் தொழுகை நடத்தினா். பின்னா் ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்டனா். சிறுவா்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதேபோல, தக்கலை, திருவிதாங்கோடு, தேங்காய்ப்பட்டினம், மாா்த்தாண்டம், திங்கள்நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜும்மா பள்ளிவாசல்களிலும் தியாகத் திருநாளின் சிறப்புகள், ஈகை குணத்தின் அவசியம் குறித்து உலமாக்கள் சிறப்புரையாற்றினா்.









