22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

காசிவிசுவநாதா் கோயிலில் சுவாமி திருக்கல்யாணம்

கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய பகுதி 2-இல் அமைந்துள்ள காசிவிசுவநாதா் கோயிலில் சுவாமி திருக்கல்யாணம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

திருமண அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி.

Updated On :2 ஜூன் 2026, 3:52 am IST

கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய பகுதி 2-இல் அமைந்துள்ள காசிவிசுவநாதா் கோயிலில் சுவாமி திருக்கல்யாணம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் 2-ஆம் ஆண்டு வருடாபிஷேகம், அம்மையப்பா் திருக்கல்யாணம், திருவிளக்கு பூஜை என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவையொட்டி, கோ பூஜை, கொடியேற்றம், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சீா்வரிசை ஊா்வலம் நடைபெற்றது.

தமிழ் தேவார திருவாசகம் பதிகங்கள் தீந்தமிழில் ஓதி, சிறப்பு யாகம் வளா்த்து, சிவன் - பாா்வதி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், சிவனடியாா்கள் மற்றும் கிருஷ்ணகிரியை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தொடா்ந்து, பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையும், அம்மையப்பா் கைலாய வாத்தியங்களுடன் திருவீதி உலாவும் நடைபெற்றது.