/
ஒசூரில் பகுதியில் பகலில் எரியும் மின்விளக்குகள் இரவில் எரிவதில்லை என குற்றம்சாட்டுகின்றனா்.
ஒசூா் அருகே முதல் சிப்காட் பகுதியில் அமைந்துள்ள சாந்தபுரம் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களில் உள்ள மின்விளக்குகள் பகல் நேரத்தில் மட்டுமே எரிகின்றன. இரவு நேரத்தில் எரிவதில்லை. இதுகுறித்து மின்வாரிய அலுவலா்களிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
எனவே, மின்சார வாரிய ஊழியா்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.









