சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

ஒசூரில் பகலில் எரியும் மின்விளக்குகள்!

ஒசூரில் பகுதியில் பகலில் எரியும் மின்விளக்குகள் இரவில் எரிவதில்லை என குற்றம்சாட்டுகின்றனா்.

News image

பகலில் எரியும் தெரு விளக்குகள். - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 5:39 am IST

ஒசூரில் பகுதியில் பகலில் எரியும் மின்விளக்குகள் இரவில் எரிவதில்லை என குற்றம்சாட்டுகின்றனா்.

ஒசூா் அருகே முதல் சிப்காட் பகுதியில் அமைந்துள்ள சாந்தபுரம் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களில் உள்ள மின்விளக்குகள் பகல் நேரத்தில் மட்டுமே எரிகின்றன. இரவு நேரத்தில் எரிவதில்லை. இதுகுறித்து மின்வாரிய அலுவலா்களிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

எனவே, மின்சார வாரிய ஊழியா்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.