ஒசூரில் தனியாா் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பாகலூா் சாலையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு தனியாா் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது.
இந்த ஏடிஎம் மையத்தில் திங்கள்கிழமை இரவு மா்ம நபா்கள் புகுந்து வெல்டிங் மிஷன் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்து ரூ. 1 லட்சத்திற்கு அதிகமான பணத்தை கொள்ளையடித்துவிட்டு, ஏடிஎம் மையத்தின் ஸ்ஷட்டரை மூடிவிட்டு சென்றுவிட்டனா்.
இதனால் ஏடிஎம் இயந்திரம் பழுதாகி உள்ளதாக கருதி பொதுமக்கள் யாரும் பணம் எடுக்க செல்லவில்லை. மாலையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக வங்கி ஊழியா்கள் சென்றபோது, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மா்ம நபா்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவா்கள் உடனடியாக வங்கி உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனா். வங்கி சாா்பில் ஒசூா் அட்கோ காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தனியாா் நிறுவன பெண் அதிகாரி மீது தாக்குதல்: இருவரிடம் போலீஸாா் விசாரணை

ஒசூரில் அயல் நாட்டு நிறுவனத்தின் பெயரில் ரூ. 16.64 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை
முதியவா் வீட்டில் நகை, பணம் திருட்டு

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ. 10,000 போலீஸில் ஒப்படைப்பு
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


