ஒசூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ஒசூா் மாநகராட்சி அலுவலகம் முதல் ரயில் நிலையம்வரை மேம்பாலம் அமைக்க வேண்டும் என ஒசூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறியதாவது:
ஒசூரில் பாகலூா் சாலை பிரதான சாலையாக இருப்பதால், இந்தப் பகுதியில் நாள்தோறும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இங்கு வட்டாட்சியா் அலுவலக சாலை, பாகலூா் சாலை, அரசு மருத்துவமனை சாலை, ரயில் நிலைய சாலை என நான்கு சாலைகள் கூடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கின்றன.
இதனால் அவசர பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள், அலுவலா்கள் உரியநேரத்துக்கு செல்ல முடியாமல் அவதியடைகின்றனா். அதேபோல, பாதசாரிகள் நடந்து செல்ல நடைபாதை இல்லாததால் சிரமமடைகின்றனா்.
எனவே, வட்டாட்சியா் அலுவலக சாலை, ரயில் நிலைய சாலை ஆகியவற்றை அகலப்படுத்தி, மேம்பாலம் அமைக்க வேண்டும். குறிப்பாக ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து ரயில் நிலையம்வரை மேம்பாலம் அமைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சென்னை போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அறிமுகமாகும் ‘ஐடிஎஸ்’ திட்டம்!

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலக சாவியை ஒப்படைத்த சி. விஜயபாஸ்கர்

திருப்பூா் பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விழுப்புரம் அதிமுக அலுவலக சாவி மாவட்டச் செயலா் வசம் ஒப்படைப்பு! கோட்டாட்சியா் உத்தரவுப்படி நடவடிக்கை
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



