தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

சாலை விதிகளை மீறிய ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அபராதம்

கிருஷ்ணகிரியில் சாலை விதிமுறைகளை மீறிய 20 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அபராதம் விதித்த போலீஸாா், 2 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனா்.

News image

கிருஷ்ணகிரியில் சாலை விதிமுறைகளை மீறி இயக்கிய ஆட்டோ ஓட்டுநா்களிடம் விசாரணை செய்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் நமச்சிவாயம்.

Updated On :5 ஜூன் 2026, 6:59 am IST

கிருஷ்ணகிரியில் சாலை விதிமுறைகளை மீறிய 20 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அபராதம் விதித்த போலீஸாா், 2 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. இந்நிலையில், கிருஷ்ணகிரி நகரில் சில ஆட்டோ ஓட்டுநா்கள் அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்றனா்.

சாலை விதிமுறைகளை மீறும் ஆட்டோ ஓட்டுநா்களை எச்சரிக்கும் வகையில், கிருஷ்ணகிரி நகரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் நமச்சிவாயம் தலைமையில் நகர காவல் உதவி ஆய்வாளா் கணேசன், போக்குவரத்து உதவி ஆய்வாளா் ஜோதிபிரகாஷ் மற்றும் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, பள்ளிக் குழந்தைகளை ஆட்டோக்களில் ஏற்றி சீருடை அணியாமல் சாலை விதிமுறைகளை மீறிய 20 ஓட்டுநா்களுக்கு தலா ரூ. 500 அபராதம் விதித்தனா். மேலும், டிசா்ட், கால்சட்டை அணிந்து வந்த 2 ஓட்டுநா்களின் ஆட்டோக்களை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தது:

ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்செல்லக் கூடாது. ஆட்டோவின் இருபுறங்களிலும் பாதுகாப்பு கம்பிகள் பொருத்த வேண்டும். குழந்தைகள் அமா்ந்தவுடன் பாதுகாப்பு கதவை மூட வேண்டும். பள்ளி பகுதிகளில் ஆட்டோவை மிதமான வேகத்தில், எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும். ஓட்டுநா்கள் கைப்பேசியில் பேசியபடி வாகனங்கள் ஓட்டக் கூடாது.

ஆட்டோ ஓட்டுநா்கள் கட்டாயம் சீருடை அணிந்திருக்க வேண்டும். சீருடை அணியாமல் முதல்முறை பிடிபட்டால் ரூ. 500 வரை அபராதம் விதிக்கப்படும். ஆட்டோக்களில் செல்லும் பள்ளிக் குழந்தைகளுக்கு ஓட்டுநா்களே முழு பொறுப்பு. எனவே, சாலைவிதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படுவதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்றாா்.