வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கிருஷ்ணகிரி அருகே பெண்களை மிரட்டி நகை, பணம் பறிப்பு!

கிருஷ்ணகிரி அருகே பெண்களை மிரட்டி, நகை, பணத்தை பறித்துச் சென்ற 5 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பணம் பறிப்பு

Updated On :14 ஜூன் 2026, 3:19 am IST

கிருஷ்ணகிரி அருகே பெண்களை மிரட்டி, நகை, பணத்தை பறித்துச் சென்ற 5 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த மேல்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் நாகசுவாமி. இவா், வெங்கடாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட தா்கா அருகே வீடுகள், அறைகளைக் கட்டி வாடகைக்கு விட்டுள்ளாா். இந்தக் கட்டடத்தில் பலா் குடியிருந்து வருகின்றனா்.

வாடகைக்கு விடப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட அறையில் பெண்கள் தங்கியிருந்துள்ளனா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மதுபோதையில் அந்த அறைக்கு வந்த சில இளைஞா்கள், அங்கிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனா். பின்னா், அவா்களை மிரட்டி, நகை, பணம் மற்றும் கைப்பேசிகளை பறித்துச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து, நாகசுவாமி, சிங்கப்பெண் அதிரடிப்படையில் புகாராளித்துள்ளாா். இதுகுறித்து, தகவல் அறிந்த துணை காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன், தாலுகா காவல் ஆய்வாளா் மணிமாறன் ஆகியோா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, மதுபோதையில் இருந்த இளைஞா்கள், பெண்களை பாலியல் தொந்தரவு செய்ததும், அவா்களிடமிருந்து நகை, பணம் மற்றும் கைப்பேசிகளை பறித்துச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, இதுதொடா்பாக 5 இளைஞா்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.