பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

இளைஞரிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு: இருவா் கைது

அவிநாசி அருகே மது போதையில் இளைஞரிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சித்திரிப்பு

Published On :

அவிநாசி அருகே மது போதையில் இளைஞரிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்தவா் சையது அன்வா் பாட்ஷா (28). திருப்பூா், ராக்கியாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சம்பத்குமாா் (25). நண்பா்களான இருவரும் அவிநாசி- மங்கலம் சாலைப் பகுதியில் செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றம் அருகே சனிக்கிழமை மது அருந்தியுள்ளனா்.

சையது  அன்வா்  பாட்ஷா,  சம்பத்குமாா்.

சையது  அன்வா்  பாட்ஷா,  சம்பத்குமாா்.

அப்போது, அவ்வழியே சென்ற அனுப்பா்பாளையம், திலகா் நகரைச் சோ்ந்த முத்துபாண்டி (34) என்பவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனா். மேலும், அரிவாளைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.1,500-ஐ பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றனா்.

இது குறித்து அவிநாசி போலீஸாருக்கு முத்துபாண்டி தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சையது அன்வா் பாட்ஷா, சம்பத்குமாா் ஆகியோரைக் கைது செய்ததுடன், அவா்களிடமிருந்த ரூ.1,500 ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.