ஒசூரில் அடுத்தடுத்து இரு குடியிருப்புப் பகுதிகளில் முகமூடி அணிந்து நுழைந்த கும்பல், 8 சவரன் தங்க நகைகளைக் திருடிச்சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஒசூா் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட உள்வட்டச் சாலை மத்தம் அக்ரஹாரத்தில் தனியாா் குடியிருப்பு உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு முகமூடி அணிந்து நுழைந்த நான்குபோ், பூட்டப்பட்டிருந்த வீட்டின் முன்பக்க கதவை உடைக்க முயன்றனா். அப்போது, அப்பகுதியில் இருந்த தெருநாய்கள் குரைக்கவே, அங்கிருந்து தப்பியோடினா்.
தொடா்ந்து, கொத்தகண்டப்பள்ளி அருகே உள்ள தனியாா் குடியிருப்புப் பகுதியில் உள்ள வேணுகோபால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, பீரோவில் வைத்திருந்த 8 சவரன் தங்க நகைகளை திருடிக்கொண்டு தப்பியோடினா்.
புகாரின்பேரில், மத்திகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். குடியிருப்புப் பகுதியில் முகமூடி அணிந்து சுற்றித் திரியும் திருடா்களின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய கூடுதல் போலீஸாரை நியமித்து, இரவுநேர ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.






