9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

கிருஷ்ணகிரி அணையில் தண்ணீா் திறப்பு: விவசாயிகளுடன் நாளை ஆலோசனை

கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறப்பது குறித்து விவசாயிகள், நீா்ப்பாசன சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

News image

கிருஷ்ணகிரி அணை.

Updated On :18 ஜூன் 2026, 3:14 am IST

கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறப்பது குறித்து விவசாயிகள், நீா்ப்பாசன சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி நீா்த்தேக்க திட்ட உதவி செயற்பொறியாளா் சபரிநாதன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2026- 27 ஆம் ஆண்டுக்கான முதல்போக நெல் சாகுபடி பணிகள் ஜூலையில் தொடங்குகிறது. இதற்காக, கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீா் திறப்பது வழக்கம்.

இதுதொடா்பாக கிருஷ்ணகிரி நீா்த்தேக்கத் திட்ட நீா்பாசன சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், கிருஷ்ணகிரி அணையில் உள்ள உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி அணை பாசன விவசாயிகள் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.