பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

ஜமாபந்தி: 142 மனுக்கள் மீது நடவடிக்கை

ஒசூரை அடுத்த பாகலூா் உள்வட்டத்தில் உள்ள 11 கிராமங்களுக்கான ஜமாபந்தி முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 142 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியா் ச. தினேஷ்குமாா் உத்தரவிட்டாா்.

News image

ஜமாபந்தியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியா் ச. தினேஷ்குமாா்.

Updated On :19 ஜூன் 2026, 5:44 am IST

ஒசூரை அடுத்த பாகலூா் உள்வட்டத்தில் உள்ள 11 கிராமங்களுக்கான ஜமாபந்தி முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 142 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியா் ச. தினேஷ்குமாா் உத்தரவிட்டாா்.

ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற 4ஆவது நாள் ஜமாபந்தியில் பாகலூா் உள்வட்டத்தில் உள்ள கொளதாசபுரம், நந்திமங்கலம், பலவனப்பள்ளி, அடவனப்பள்ளி, சூடுகொண்டப்பள்ளி, அளேநத்தம், நாரிகானபுரம், ஆலூா் மற்றும் மத்திகிரி உள்வட்டத்தில் மத்திகிரி, ஒன்னல்வாடி, தொரப்பள்ளி, அக்ரஹாரம் உள்பட மொத்தம் 11 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனு அளித்தனா்.

பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா். தொடா்ந்து, 11 கிராமங்களைச் சோ்ந்த கிராம கணக்கு பதிவேடுகளை ஆய்வு செய்தாா். மேலும், திம்மசந்திரம் கிராமத்தைச் சோ்ந்த முனியப்பாவுக்கு வாரிசு சான்றிதழ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் தனி மாவட்ட வருவாய் அலுவலா் ராஜா (உதவி நிலவரித் திட்டம்), மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் (பொது) குருநாதன், வட்டாட்சியா் ஜெகதீஸ்குமாா், தனி வட்டாட்சியா்கள் சண்முகம், சுப்ரமணி மற்றும் வருவாய்த் துறை, கிராம நிா்வாக அலுவலா்கள், வேளாண்மைத் துறை, தாட்கோ, மாநகராட்சி, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.