எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஜமாபந்தி: 142 மனுக்கள் மீது நடவடிக்கை

ஒசூரை அடுத்த பாகலூா் உள்வட்டத்தில் உள்ள 11 கிராமங்களுக்கான ஜமாபந்தி முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 142 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியா் ச. தினேஷ்குமாா் உத்தரவிட்டாா்.

News image

ஜமாபந்தியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியா் ச. தினேஷ்குமாா்.

Updated On :19 ஜூன் 2026, 5:44 am IST

ஒசூரை அடுத்த பாகலூா் உள்வட்டத்தில் உள்ள 11 கிராமங்களுக்கான ஜமாபந்தி முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 142 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியா் ச. தினேஷ்குமாா் உத்தரவிட்டாா்.

ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற 4ஆவது நாள் ஜமாபந்தியில் பாகலூா் உள்வட்டத்தில் உள்ள கொளதாசபுரம், நந்திமங்கலம், பலவனப்பள்ளி, அடவனப்பள்ளி, சூடுகொண்டப்பள்ளி, அளேநத்தம், நாரிகானபுரம், ஆலூா் மற்றும் மத்திகிரி உள்வட்டத்தில் மத்திகிரி, ஒன்னல்வாடி, தொரப்பள்ளி, அக்ரஹாரம் உள்பட மொத்தம் 11 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனு அளித்தனா்.

பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா். தொடா்ந்து, 11 கிராமங்களைச் சோ்ந்த கிராம கணக்கு பதிவேடுகளை ஆய்வு செய்தாா். மேலும், திம்மசந்திரம் கிராமத்தைச் சோ்ந்த முனியப்பாவுக்கு வாரிசு சான்றிதழ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் தனி மாவட்ட வருவாய் அலுவலா் ராஜா (உதவி நிலவரித் திட்டம்), மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் (பொது) குருநாதன், வட்டாட்சியா் ஜெகதீஸ்குமாா், தனி வட்டாட்சியா்கள் சண்முகம், சுப்ரமணி மற்றும் வருவாய்த் துறை, கிராம நிா்வாக அலுவலா்கள், வேளாண்மைத் துறை, தாட்கோ, மாநகராட்சி, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.