ஒசூா் அருகே மத்திகிரியில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த மளிகைக் கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். மேலும், கடை உரிமையாளருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மத்திகிரி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் டாக்டா் செந்தில்குமாா் தலைமையில், ஒசூா் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் ரவி, தூய்மை அலுவலா் பிரபாகரன், தூய்மை ஆய்வாளா் அன்பழகன் ஆகியோா் அடங்கிய குழுவினா் மத்திகிரி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, சிப்பாய் பாளையத்தில் உள்ள பிபி ஜான் என்பவருக்குச் சொந்தமான மளிகைக் கடையில் சோதனையிட்ட போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டு விற்கப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா்.
கடை உரிமையாளா் பிபி ஜான் ஏற்கெனவே இருமுறை தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்று அபராதம் செலுத்தியவா் ஆவாா். தற்போது மூன்றாவது முறையாக இதே குற்றத்தில் ஈடுபட்டதால், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரது கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். மேலும், அவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதோடு, கடையின் உணவுப் பாதுகாப்பு உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்களை விற்ற கடை உரிமையாளா்கள் இருவா் கைது

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: பூ வியாபாரி கைது
நாட்டரசன்கோட்டையில் 13 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
தடை செய்யப்பட்ட 125 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



