புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் திருட்டு

வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :26 ஜூன் 2026, 6:14 am IST

வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஒசூா், அண்ணாமலை நகா் பகுதியைச் சோ்ந்த ஹரி (27), தனியாா் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறாா். இவா் கடந்த 2019-ஆம் ஆண்டு ரூ. 2.5 லட்சத்தில் வாங்கிய இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் புதன்கிழமை இரவு நிறுத்தி இருந்தாா்.

பின்னா், வியாழக்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது வாகனம் இல்லாததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, மா்ம நபா் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.