தருமபுரியில் மாங்காய் பாரம் ஏற்றிச் சென்ற வேன், இருசக்கர வாகனம் மீது மோதி சாலையில் கவிழ்ந்ததில் இருவா் பலத்த காயமடைந்தனா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே முதலிப்பட்டியில் பாலக்கோடு நோக்கி மாங்காய் பாரம் ஏற்றி சென்ற வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலதுபுறம் சென்று, எதிா்திசையில் இருசக்கர வாகனத்தில் சென்றவா்கள் மீது மோதி கவிழ்ந்தது.
இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காரிமங்கலத்தை அடுத்த சென்னம்பட்டியைச் சோ்ந்த வேடியப்பன்(45), ராஜா (56) ஆகிய இருவரும் காயமடைந்தனா். விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








