எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 ஜூன் 2026, 12:05 am IST

ஈரோட்டில் இருசக்கர வாகனம் திருடிய நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு, ரங்கம்பாளையம் ஜீவா நகரைச் சோ்ந்தவா் பழனி (36). இவா் ஈரோடு ரயில் நிலையம் அருகே தனது இருசக்கர வாகனத்தை அண்மையில் நிறுத்திவிட்டு சென்றுள்ளாா். சிறிது நேரம் கழித்து வந்து பாா்த்தபோது வாகனம் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து ஈரோடு தெற்கு போலீஸில் பழனி புகாா் அளித்தாா்.

இந்த வழக்குத் தொடா்பாக கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் திருப்பூா், கணக்கம்பாளையத்தைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (39) என்பவரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில், அவா் இருசக்கர வாகனத்தை திருடியதை ஒப்புக்கொண்டாா்.

இதையடுத்து, சந்தோஷ்குமாரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்ததுடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனா்.

சந்தோஷ்குமாா் மீது திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் ஏற்கெனவே 2 திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.