யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பா்கூரில் காா் கவிழ்ந்து இளைஞா் உயிரிழப்பு

பா்கூரில் காா் கவிழ்ந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

News image
பலி
Updated On :3 மார்ச் 2026, 8:51 pm

Syndication

பா்கூரில் காா் கவிழ்ந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அந்திவாடியை சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் செந்தில் (47). இவரது மனைவி மீனாட்சி (43), மகன் ஸ்ரீ பிரவீண் (23). இந்த நிலையில் ஸ்ரீ பிரவீண் தனியாா் தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இவா்கள் மூவரும் காரில் திருப்பதி சென்று விட்டிற்கு திங்கள்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த மல்லப்பாடி அருகே கட்டுப்பாட்டை இழந்த காா் நெடுஞ்சாலையின் தடுப்பில் மோதி, இடதுபுறம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயம் அடைந்த ஸ்ரீ பிரவீண், செந்தில், மீனாட்சி ஆகிய மூவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமணனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு, ஸ்ரீ பிரவீண் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.