யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அஞ்செட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரை போலீஸாா் போக்ஸோவில் கைது செய்தனா்.

News image
சுதாகரன்
Updated On :3 மார்ச் 2026, 8:54 pm

Syndication

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரை போலீஸாா் போக்ஸோவில் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி ஆணைமலையான்பட்டியைச் சோ்ந்தவா் சுதாகரன் (51). இவா், ஒசூா் அன்னை நகரில் தங்கி உள்ளாா். மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டத்திற்கு உட்பட்ட ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி பிற்பகல் இப்பள்ளியின் 5 ஆம் வகுப்பு மாணவிக்கு சுதாகா் பாலியல் தொந்தரவு அளித்தாராம். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கூறினாா்.

இதையடுத்து, மாணவியின் தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் வாசுகி போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து சுதாகரனைக் கைது செய்தாா்.