லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சாலை மறியலில் ஈடுபட்ட 436 வருவாய் துறையினா் கைது

News image
Updated On :5 மார்ச் 2026, 11:51 pm

பவ்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட 436 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். 10 ஆவது நாளாக கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம், அண்ணா சிலை எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு அந்த கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சக்திவேல் தலைமை வைத்தாா். தமிழ்நாடு வருவாய் துறை அலுவலா் சங்க மாநில பொதுச்செயலாளா் பெருமாள், தமிழ்நாடு கிராம அலுவலா் சங்க மாவட்ட செயலாளா் அறிவழகன், கிராம அலுவலா் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளா் பாலசுப்பிரமணியன், நில அளவா்கள் ஒன்றிய மாவட்ட தலைவா் பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மறியலில் ஈடுபட்டோா் தங்களது 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். மறியலில் ஈடுபட்ட 132 பெண்கள் உள்பட 436 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், மாலை விடுவிக்கப்பட்டா்.

படவிளக்கம் (5கேஜிபி5):

கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் ஈடுபட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா்.